தேசிய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம் !! 1

தேசிய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிராவிட் நாளை தனது புதிய பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

தேசிய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம் !! 2

 

இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக கருதப்பட்ட டிராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது இந்தியா ‘ஏ’ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களின் ஜூனியர் பயிற்சியாளராக உள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் கிரிக்கெட் தலைவராக வரும் ஜூலை 1ம் தேதி டிராவிட் பொறுப்பேற்கவுள்ளார். இதனால் இவரால் இந்திய ‘ஏ’, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களின் ஜூனியர் அணிகள் பங்கேற்கும் எல்லா தொடர்களுக்கு உடன் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தேசிய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம் !! 3

இதுகுறித்து பிசிசிஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டிராவிட் ஏற்கவுள்ள பொறுப்பு மிகவும் முக்கியமானது. அதனால் அவர் ஜூனியர் அணியை விட தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். அதே நேரம் ஜூனியர் தொடர்களிலும் தேவைப்படும் போது உடன் செல்வார்.’ என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *