யோ-யோ டெஸ்ட் க்ளியர் செய்துவிட்டார் பீல்டிங் கில்லி ரெய்னா 1
Cricket, India, Australia, Ashish Nehra, Suresh Raina www.hdnicewallpapers.com

யோ-யோ டெஸ்ட் க்ளியர் செய்துவிட்டார் பீலடிங் கில்லி ரெய்னா

கடந்த பல மாதங்களாக கடினமான உழைப்பின் பலனாக தற்போது யோ-யோ தேர்வை க்ளியர் செய்துள்ளார் முன்னாள் இந்திய அணி வீரர் சுரர்ஷ் ரெய்னா.

இந்திய அணியில் இடம் பெற கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சொல்லப்பட்ட உடல் தகுதி தேர்வு தான் இந்த யோ-யோ தேர்வு. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரது முடிவே இந்த ஊடக தகுதி தேர்வு.

பொதுவாக இந்திய அணியில் தேர்வாக நார்மல் ஆன உடல் தகுதி அதிக கிரிக்கெட் திறன் இருந்தால் போதும் என்று இருந்தது. ஆனால் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடல் தகுதிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர். மேலும், இந்தியாவில் இருக்கும் தற்போதைய உலகத் தரம் வாய்ந்த வீரர்களை வைத்து இன்னும் இரண்டு அணிகளை உருவாக்கலாம். அந்த அளவிற்கு திறமை வாய்ந்த வீர்ரகள் இருக்கின்றனர். இதனால் இந்திய அணியில் இடம் பிடிக்க போட்டிகள் அதிகம். அதே நேரத்தில் இந்திய அணியில் இடமா பிடிக்க ஒரு சர்வதேச தரம் வாய்ந்த வீரராக இருக்க, நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும் என்பதை மனதில் வைத்தது இந்த யோ-யோ உடல் தகுதி தேர்வு அனைத்து வீரர்களுக்கும் வைக்கப்படுகிறது.

யோ-யோ டெஸ்ட் க்ளியர் செய்துவிட்டார் பீல்டிங் கில்லி ரெய்னா 2

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆடர் தூணாக இருந்த சுரேஷ் ரெய்னா. சரியாக சோபிக்காதால் ஒருநாள் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிடப்பட்டார். இந்த வருட ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஸ்டான்ட் பை வீர்ரகள் பட்டியலில் சைக்கப்பட்டார் ரெய்னா. ஆனால், அசார் கடைசியாக ஒருநாள் போட்டியில் ஆடியது, 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்கவிற்கு எதிராக ஆடியது தான். அந்த தொடரிலும் பெரிதாக சோபிக்காததால், அப்படியே அணிக்கு வெளியே தள்ளப்பட்டார். அதன் பின்னர் அவ்வப்போது டி20 போட்டிட்டில் மட்டும் ஆடிபவந்த ரெய்னா, கடைசியாக இந்த வருட துவக்கத்தில் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ஆடினார். அதன் பின்னர் நியூசிலாந்து தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் காய்ச்சல் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்னர்தான் வந்தது, இந்த யோ-யோயே வேட்டு. உள்ளூர் போட்டிகளில் எவ்வளவு ரன் குவித்தாலும் சரி அந்த உடல் தகுதி தேர்வில் 16.3 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை வந்து.

அடுத்தடுத்து இந்த தேர்வில் கலந்து கொண்டு யுவராஜ் சிங் மற்றும் ரெய்னா போன்ற வீரர்கள் தோல்வியை மட்டுமே தழுவினர். இதன் காரணமாக இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மீண்டும் இலங்கை அணியுடன் தற்போது நடைபெற்று வரும் தொடர் என அனைத்திலும் கலட்டிவிடப்பட்டார் ரெய்னா.

எப்படியாவது இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தே ஆக வேண்டும் என, கங்கணம் கட்டி கடுமையாக உழைத்தார் ரெய்னா. இதற்காக அவரது உடல் தகுதியை மேம்படுத்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இரன்டு உடல் தகுதி மற்றும் உளவியல் தகுதிக்காக இரண்டு உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களை வைத்து பயிற்சி செய்தார் ரெய்னா.

தொடர்ந்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அக்காடமியின் பபையை ஏறி மிதித்தபடி இருந்தார் ரெய்னா. அவரது உடலை 15 கிலோ வரவு குறைத்து தினமும் ஜிம்மிலேயே பல மணி நேரத்தை செலவு செய்து இன்று அந்த யோ-யோ தேர்வை வெற்றிகரமாக க்ளியர் செய்துள்ளார் ரெய்னா.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க யோ-ஒ தேர்வை க்ளியர் செய்துவிட்டேன் என பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் யுவராஜ் சிங்கும் இந்த தேர்வை க்ளியர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய ஒருநாள் அணியில் நெ.4 மிடில் ஆடரில் சற்று தடுமாற்றம் நீடிப்பதால் அந்த இடத்தில் இருந்த ரெய்னா மீண்டும் தனது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் போட்டிகளில் சென்று கணிசமான ரன்களை குவிப்பதன் மூல இந்திய அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்பலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *