டெல்லி ரஞ்சி அணியில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பிர் பெயர்கள் இடம்!! 1
NOTTINGHAM, ENGLAND - JULY 07: Gautam Gambhir of India looks on during a India nets session at Trent Bridge on July 7, 2014 in Nottingham, England. (Photo by Matthew Lewis/Getty Images)

இந்த வருட ரஞ்சி கோப்பை தொடருக்கான பணிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை வித்தியாசமாக நடக்கும் ரஞ்சிக் கோப்பை தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்ற.ன மேலும் பாண்டிச்சேரியில் இருந்து புதிய அணியும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 6 புதிய அதிகம் கலந்துகொள்கிற.

தற்போது ஒவ்வொரு மாநிலமும் தங்கள் வீரர்கள் தயார் படுத்தி வருகின்றது இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் தனது 30 பேர் கொண்ட உத்தேச அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த பட்டியலில் முன்னாள் இந்திய அணி வீரரும் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீரும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, புஜாராவின் சதத்தின் (132 ரன், நாட்-அவுட்) உதவியுடன் முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

டெல்லி ரஞ்சி அணியில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பிர் பெயர்கள் இடம்!! 2
India captain Virat Kohli during the nets session at Lord’s, London. (Photo by Tim Goode/PA Images via Getty Images)
இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, சரிவை சமாளித்து நேற்றை ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அடுத்த இரண்டு விக்கெட்களை இழந்தது. 96.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 27 ரன்கள் பின்தங்கியிருந்ததால், இங்கிலாந்து 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் முகமதுஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்தியா 3 விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தது. தவான், ராகுல் மற்றும் புஜாரா வரிசையாக வெளியேறினர். ஆண்டர்சன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றினார். இதனிடையே கேப்டன் கோலியும், ரகானேவும அணியை சரிவிலிருந்து மீட்டனர்.டெல்லி ரஞ்சி அணியில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பிர் பெயர்கள் இடம்!! 3

இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் 123 ஆக இருக்க, அரை சதம் கண்டிருந்த கோலி (58 ரன்கள்), மொயீன் அலி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ரிஷாப் பாண்ட் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி ரகானேவை மலை போல் நம்ப, அவரும் 51 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 184 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மொயீன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *