வாரியத்துக்கு எதிராக நடந்துகொண்டு, கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! நடவடிக்கைக்கு காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்! 1

வாரியத்துக்கு எதிராக நடந்துகொண்டு, கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! நடவடிக்கைக்கு காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்!

ரஞ்சி அணிக்கு ஆட மறுத்ததாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது புகார் அளித்துள்ளது ரஞ்சிக்கோப்பை அணி நிர்வாகம்.

இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர்களில் 4வது இடத்தில் களமிறங்கும் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் புதிய இளம் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகிய இருவரும் ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றனர்.

வாரியத்துக்கு எதிராக நடந்துகொண்டு, கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! நடவடிக்கைக்கு காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்! 2

இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினர். ஷ்ரேயஸ் ஐயர் தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தனது இடத்தை தக்கவைத்து வருகிறார்.

இந்திய அணி வரும் 5ஆம் தேதி இலங்கை அணியை டி20 தொடர்களில் எதிர்கொள்கிறது. சுமார் இரண்டு வார விடுமுறை இருந்தும் 25-ந்தேதி தொடங்கிய ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடுவதற்கு இருவரும் நிராகித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாரியத்துக்கு எதிராக நடந்துகொண்டு, கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! நடவடிக்கைக்கு காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்! 3

இதற்கு பதில் அளித்த மும்பை கிரிக்கெட் சங்கம் “இது மும்பை கிரிக்கெட் சற்றும் எதிர்பாராத ஒன்று. நாங்கள் இருவரிடமும் அணியில் ஆடுவது குறித்து பேசினோம். அப்போது பிசிசிஐ எங்களை ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளது என்று கூறினார்கள்.

எனினும், நாங்கள் தேர்வுக்குழுவினருடன் பேசி உறுதி செய்தபோது, நாங்கள் அதுபோன்ற இந்த தகவலையும் வீரர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறினர். அப்படியென்றால் அவர்களை ஓய்வு எடுக்கச் சொன்னது யார்?. இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோவா? அல்லது டிரைனரா? அல்லது அவர்களே ஓய்வு எடுக்க முடிவு செய்தனரா? பிசிசிஐ பின்புறத்தில் இருந்து இப்படி செய்கிறார்களா?.

வாரியத்துக்கு எதிராக நடந்துகொண்டு, கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! நடவடிக்கைக்கு காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்! 4

தேர்வாளர்கள் உள்பட மும்பை கிரிக்கெட் சங்கம் இருவர் மீதும் அதிருப்தியில் உள்ளது. அடுத்த உயர்மட்டக்குழுவில் இதுகுறித்து உறுதியாக விவாதிப்போம். முதல்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *