அந்த ஜாம்பவானை விட நான் தான் பெஸ்ட்னு அவரே சொன்னாருங்க!! ரஷீத் கான் பெருமிதம் !! 1
அந்த ஜாம்பவானை விட நான் தான் பெஸ்ட்னு அவரே சொன்னாருங்க!! ரஷீத் கான் பெருமிதம்

ஸ்பின் பவுலிங்கில் முரளிதரனைவிட நான் திறமையானவர் என அவரே என்னிடம் கூறினார் என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின் பவுலராக வலம் வருபவர் ரஷீத் கான். 19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷீத் கான், ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசினார். அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ரஷீத் கானின் திறமையான சுழற்பந்து வீச்சு முக்கியமான காரணம்.

ரஷீத் கானின் ஸ்பின் பவுலிங் திறமையை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் வெகுவாக பாராட்டினர்.

இவ்வாறு சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஸ்பின்னராக வலம்வரும் ரஷீத் கான், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது முத்தையா முரளிதரன் தன்னிடம் கூறிய விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த ஜாம்பவானை விட நான் தான் பெஸ்ட்னு அவரே சொன்னாருங்க!! ரஷீத் கான் பெருமிதம் !! 2

மிகச்சிறந்த சுழல் ஜாம்பவனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமைக்கும் உரியவர் முரளிதரன். பவுலிங் சார்ந்த பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் முத்தையா முரளிதரன். அப்படிப்பட்ட சுழல் ஜாம்பவனான முத்தையா முரளிதரன், அவரை விட ரஷீத் கான் திறமையானவர் என கூறியிருக்கிறார்.

இந்த தகவலை ரஷீத் கான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஐபிஎல்லில் ரஷீத் கான் ஆடும் ஹைதராபாத் அணிக்கு முரளிதரன் தான் பவுலிங் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சுழல் ஜாம்பவான் முரளிதரன், இளம் வீரரை இவ்வாறு சொல்லி ஊக்கப்படுத்தியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *