இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கு பிறகு தோனி ஓய்வு பெறுவதற்கு 4 காரணங்கள்

இந்த ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அன்றிலிருந்து அவர் எப்பொழுது ஓய்வு பெறுவார் என்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. ராஞ்சியில் பிறந்த மகேந்திர சிங்க் தோனி, இந்திய அணிக்காக 2007-இல் டி20 கிரிக்கெட் உலக கோப்பை, 2011-இல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013-இல் சாம்பியன்ஸ் ட்ராப்பி என அனைத்து கோப்பைகளையும் வென்று, இந்தியாவிற்கு சிறந்த கேப்டனாக இருந்தார்.

2019 உலக கோப்பை முடிந்த பிறகு தான் தோனி ஓய்வு பெறுவார் என கூறுகிறார்கள், ஆனால் அவர் எப்பொழுது ஓய்வு பெறுவார் என்று யாருக்கும் தெரியாது. இன்னும் ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் தொடங்குகிறது. முதல் முறையாக மற்றொரு கேப்டன் தலைமையில் சாம்பியன்ஸ் டிராப்பி விளையாடுகிறார் தோனி.இதனால், 2013-இல் வென்ற சாம்பியன்ஸ் ட்ராப்பி கோப்பையை தோற்று விட கூடாது என, மறுபடியும் கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்க படுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராப்பி முடிந்ததும் அவர் ஓய்வு பெற 4 காரணங்களை பாருங்கள்:

இளம் வீரர்களின் என்ட்ரி:

மகேந்திர சிங் தோனி பார்மில் இல்லாத போது கூட, கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை. அந்த கேப்டன் பதவியில் உட்கார விராட் கோலிக்கு தகுதி வந்த பிறகு, கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் ஒரு பந்தை டைமிங் பார்த்து அடிக்க கூட போராடுகிறார்.

அதே சமயத்தில் இளம் வீரரான ரிஷிப் பண்ட் பந்தை நாளா பக்கமும் விளாசுகிறார். அவர் விக்கெட்-கீப்பிங்கும் செய்வார் என்பது குறிப்பிட தக்கது. அவருடன் மற்றொரு டெல்லி வீரர் சஞ்சு சாம்சன் கலக்குகிறார். இதனால், இவர்களுக்கு தோனி வழி விடுவார் என்று தெரிகிறது.

புது அணி:

விராட் கோலியின் தலைமையில் டெஸ்ட் அணி போலவே ஒருநாள் போட்டியிலும் புது அணி பெற்றார். கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஜேஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ர சஹால் ஆகிய வீரர்கள் இந்திய அணிக்கு விளையாட ரெடி ஆய்ட்டாங்கனு தான் சொல்லணும். அவர்கள் வந்த பிறகு இந்திய அணி தரம்வாய்ந்த அணியாக இருக்கிறது. இதனால், தோனி இல்லாத போதிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்க படுகிறது.

பார்மில் இல்லாத தோனி:

தற்போது, மகேந்திர சிங் தோனி பார்மில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 2016-இல் அவர் விளையாடிய 13 போட்டிகளில் 278 ரன்கள் மட்டுமே எடுத்தார் (சராசரி 27.80) மற்றும் ஸ்ட்ரைக்-ரேட் 80 மட்டும் தான். 2017-இல் நடந்த ஐபில் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 290 ரன்கள் மட்டுமே அடித்தார். அவர் பார்மில் இல்லை என்று சொல்ல இதுவே போதும்

உயர்ந்து நின்று விடை பெற ஆசை:

கேப்டன்சியில் இருந்து விலகிய பிறகு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன் அடித்தார். அந்த தொடரில் அதிகபட்சமாக அவர் 134 ரன் அடித்தார். பேட்டிங் ஆட முன்னாடியே இறங்கி நன்றாக விளையாடினர். இதே போல் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரிலும் விளையாடி, இந்திய அணிக்கு கோப்பையை வாங்கி தந்து, சந்தோசமாக ஓய்வு பெறலாம்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.