பொதுவாக இந்திய அணி என்றாலே மற்ற அணிகளைப் போல் அல்லாமல் நல்ல திறம் வாய்ந்த அனுபவ வீரர்களுக்கு பல காலம் அணியில் விளையாட மரியாதையுடன் வாய்ப்பு கொடுப்பது வழக்கம். லெஜன்ட் தகுதியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீரர்களும் 35 வய்திற்கு மேல் விளையாடும் கலாச்சாரம் இந்திய அணியில் உள்ளது. சச்சின், ட்ராவிட், கங்குலி, கவாஸ்கர், கபில் தேவ் என அனைவரும் 35 வயதிற்கு மேல் விளையாடியவர்களே.
ஆனால், அதற்கு மேல் ஒரு தகுதி உள்ளது அது தான் ஃபார்ம் மற்றும் உடல் தகுதி. இவை இரண்டும் இருந்தால் எவ்வளவு வயது வரை கூட விளையாடலாம். தற்போது இந்திய அணியின் அந்த வரிசை கேன்டிடேட் தன தல தோனி. அவருக்குதற்போது 36 வயதாகிறது. இருந்தும் அற்புதமாக தனது உடல் தகுதியை மெய்ன்டெய்ன் செய்து வருகிறார். நல்ல ஃபார்மிலும் உள்ளார். அணிக்கு சரியான நேரத்திலும் கை கொடுக்கிறார்.
ஆனால், நியூஸிலாந்து அணியுடனான அந்த 2ஆவது டி20 போட்டியில் சிறிது சொதப்பி விட்டார். இதனால் உடனடியாக வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர்.
முதலி, அகர்கர் தோனியை அணியில் இருக்க கூடாது அவருக்கு பதில் ரிஷப் பான்ட்டை சேர்த்துக் கொள்ளலாம். எனக் கூறி இந்த கட்சேரை ஆரம்பித்து வைக்க,
வீ.வீச்.எஸ் லட்சுமனன் அதில் சேர்ந்து தோனி டி20ல் ஆடக்கூடாது , ஒருநாள் போட்டியில் ஆடலாம் என கூறி தோனியை அணியில் இருந்து வெளியே அனுப்ப ஜோடி சேர்ந்தார்,
பின்னர் முன்னாள் கேப்டன் ககுலியும் இதே பல்லவியைப் பாட, தோனிக்கு கை கொடுக்க வந்தார் இந்நாள் கேப்டன் விராட் கோலி. அவரைப் பற்றி யாரும் பேச வேண்டம் அவருக்கு அணியில் இருக்க அனைத்து தகுதியும் இருக்கிறது, நான் தான் இந்த அணிக்கு கேப்டன் என மிரட்டும் தோனியில் பதில் கூறி தோனியியக் காப்பாற்றினார் கோலி.
இடையில் தோனிக்கு கை கொடுப்பது போல், கோச் ரவி சாஸ்திரியும் ஆதரவு அளித்துப் பேசினார். பின்னர் இந்த கதையின் ஹீரோ தோனியே வாய் திறந்து, ‘தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை’ என அனைவருக்கும் பளார் என்று வைத்தார்.
அது முடிந்து தோனியும் வீட்டில் ஹாயாக இருக்க, இந்திய அணியும் இலங்கையும் டெஸ்ட் தொடர் ஆட ஆரம்பித்துவிட்டது.
இந்த வேளையில் தற்போது சம்மந்தம் இல்லாமல் தோனியில் டாப்பிக்கை தோண்டி எடுத்துப் பேசியிருக்கிரார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மாஞ்செரேக்கர். அவர் கூறியதாவது,
அணியில், வீரரின் மதிப்பபிற்க்காகவும் அவரது மரியாதைக்காகவும் அவரை அணியில் சேர்க்கக்கூடாது. ஒவ்வொரு வீரர்ருகும் இதே தான். தோனிக்கும் இது பொருந்தும். இந்தியாவில் ஒரு வீரர் நல்ல நிலையை அடைந்துவிட்டால் அவருடைய நல்ல செயல்கள் மட்டுமே சொல்லப்படுகிறது எனக் கூறினார் மாஞ்செரேக்கர்