நான் தான் சின்ன சேவாக் தான் – ரிஷப் பண்ட்

முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், சேவாக் துணிச்சலாக சிக்ஸ் அடிப்பார் என டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் நடந்த லீக் போட்டியில் குஜராத் லயன்ஸுடன் மோதிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17வது ஓவரில் 208 ரன் சேசிங் செய்து வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் டெல்லி வீரர் ரிஷப் பண்ட் குஜராத் லயன்ஸ் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். அவர் 97 ரன்னில் இருக்கும் போது அவுட் ஆனார்.மூன்று ரன்னில் செஞ்சுரியை தவறவிட்ட போதும், ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.

இதுகுறித்து பண்ட் கூறுகையில்,’ போட்டியில் சிக்சர் அடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது, அதை நிச்சயமாக தவறவிடக்கூடாது. அது போட்டியின் முதல் பந்தாக இருந்தாலும் சரி, கடைசி பந்தாக இருந்தாலும் சரி, தைரியமாக சேவக் போல சிக்சர் அடிப்பேன். மூன்று ரன்னில் சதத்தை தவறவிட்டது வருத்தமில்லை.’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.