இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் டெஸ்ட் சாதனைகளை கோலியால் நெருங்கவே முடியாது என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ராப் கீ தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். சர்வதேச அரங்கில் சதத்தில் சதம் உட்பட் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவரின் ஒருநாள் சாதனைகளை தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி, 28 வயதிலேயே மின்னல் வேகத்தில் எட்டிப்பிடித்து வருகிறார்.
இதே வேகத்தில் கோலி செல்லும்பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகளில் ஒருநாள் அரங்கில் சச்சினின் எல்லா சாதனைகளையும் முறியடித்துவிடுவார் என கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனையை கோலியால் தொடக்கூட முடியாது என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ராப் கீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீ கூறுகையில்,’ ஒருநாள் அரங்கில் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக ஏற்கனவே உறுவாகி விட்டார். அதில் சச்சினை மட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான விவ் ரிச்சர்ட்ஸ், பிரைன் லாரா ஆகியோரையும் அவர் மிஞ்சிவிட்டார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் சாதனைகளை கோலியால் தொடக்கூட முடியாது. அதில் இன்னும் கோலி குழந்தை தான். ’ என்றார்.