ஆஸ்திரேலிய அணி முதன் முதலாக ஒரு டாஸ் வென்று பேட்டிங் தீர்மாணித்தும் பயணில்லாமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் , அதகலமான பேட்டிங் ஆடுகளத்தில் வெறும் 293 ரன்க தான் இலக்காக வைத்துக் கொடுத்திருந்தனர்.

Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
ரோகித், விராட், பாண்டியா, தோனி போன்ற வீரர்களை வைத்துவிட்டு இந்த ரன் பத்தாது என்று அவர்களுக்கே தோன்றியிருக்க வேண்டும். தற்போது செய்திக்கு வருவோம்,
293 என்ற இலக்குடன் களம் இறங்கினர் இந்திய வீரர்கள் ரகானே மற்றும் ரோகித் சர்மா ஆகியோர். ஒரு முடிவோடு தான் வந்திருப்பார்கள் போல. இருவரும் மாறி மாறி ஆஸ்திரேலிய பந்து வீச்சை வச்சு செய்யத்துவங்கினர்.
இருவரும் ஒரு சிறந்த துவக்கத்தை கொடுத்த பின்னரே ஆட்டம் இழந்தனர். அஜின்க்யா ரகானே 76 பந்துகளுக்கு 70 ரன்னும், ரோகித் சர்மா 62 பந்துகளுக்கு 71 ரன்னும் எடுத்திருந்தனர். இருவரும் சேர்ந்து 15 ஃபோர்களும் ரோகித் சர்மா தனியாக 4 சிக்சர்களும் அடித்தார்.

இதில் ஒரு சிக்சர் இமாலயம். ஆஸி வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்ச்ரசன் வீசிய 8ஆவது ஒவரின் இரண்டாவது பந்தை ரோகித் அற்புதாக புல் சாட் ஆடி 103 மீட்டருக்கு பறக்க விட்டுரிக்கிறார்.
புல் சாட் அழகாக ஆடுவதற்க்கு பெயர் போனவர் ரோகித் சர்மா. இந்த சாட் க்ரீசுக்கு வெளியில் இறங்கி வந்து இழுத்த இந்த புல் சாட் கிரிக்கெட் வர்ணனையாளர்களால் பாராட்டப்பட்டுவருகிறது.
அந்த புல் சாட்டின் வீடியோ துணுக்கு கீழே :
https://twitter.com/Cricvids1/status/911939051006992385