நேற்றைய போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அபாரமாக ஆடி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை நாளாபுறமும் சிதறடித்து ஓருநாள் போட்டிகளில் தனது 15ஆவது சதத்தை பதிவு செய்தார். ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்த போது 138 பந்துகளுக்கு 147 ரன் குவித்த்தார். இதில் 18 ஃபோர்களும் 2 சிக்சர்களும் அடங்கும்.
விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா இந்திய அணியை 337 ரன் குவிக்க உதவி புரிந்தார். ஆனால், கான்பூர் மைதாத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் இந்திய அணியினரால் தங்களது பந்து வீச்சு திட்டத்தை சரியாக செயல்படுத்த இயலவில்லை. இதனால் இந்திய அணி குவித்திருந்த அந்த 337 ரன்னை கட்டுப்படுத்துமா என்ற சந்தேகம் கடைசி ஓவர் வரை நிலவியது.
இந்திய அணியின் முன்னனி பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் 7 ஓவர்கள் வரை அவர் பந்துவீச்ச மைதானம் முழுவதும் பறக்கவிடப்பட்டது. ஆட்டம் கடைசி ஓவர் வரை எப்படியோ இழத்துச் செல்லப்பட காரணம் யுஜவேந்திர சகால் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இருவரும் தான்.
45ஆவது ஓவர் வரை நியூசிலாந்து பக்கம் இருந்து ஆட்டம், பும்ரா மற்றும் புவனேஷ்வர் சேர்ந்து கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பக்கம் மெதுவாக திருப்பினர். கடைசி 5 ஓவர்களில் 35 ரன் எடுக்க வேண்டிய நிலையில், நியூசிலாந்து அணியின் வசம் 6 விக்கெட் கையில் இருக்க ஆடகளத்தில் வலிமையாக டாம் லேதம் 62 ரன்னுடனும் நிக்கோலஸ் 36 ரன்னுடனும் இருந்தனர்.
46 ஆவது ஒவரில் தனது 9ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வர் தனது டெத் பந்து வீச்சு மூலம் இருவருக்கும் ஆட்டம் காட்டினார். அதுரை 8 ஓவர்களுக்கு 77 ரன் கொடுத்திருந்த புவனேஷ்வர் அந்த ஓவரை அருமையாக வீசி நன்றாக செட் ஆகியிருந்த ஹென்றி நிக்கோல்சை பெவிலியனுக்கு அனுப்பினார்.
அடுத்தடுத்து சுதாரித்து பந்து வீசிய பும்ரா மற்றும் புவனேஷவர் கடைசி ஓவரில் 15 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொண்டு வந்து நிறுத்தினர். மேலும், நியூசிலாந்து அணியின் முக்கியமான விக்கெட்டான டாம் லேதம் அவரையும் தூக்கி பயம் காட்விட்டனர் இருவரும்.
கடைசி ஓவரை லட்டு சாப்பிடுவது போல் வீசிவிட்டார் ஜஸ்பிரிட் பும்ரா. இறுதியாக இந்திய அணி 6 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
இருவரின் செயல்பாட்டையும் அற்புதமாக பாராட்டிய இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, அவர்கள் இருவரையும் உலகின் சிறந்த டெத் பௌலர்களாகவும் தரமளித்தார்.
அவர் கூறியதாவது,
நாங்கள் இரு சிறந்த டெத் பௌலர்களை வைத்துள்ளோம். கடைசியாக நடந்த ஆஸ்திரேலியத் தொடரிலும் நாம் பார்த்திருப்போம், இதே போல் தான் இருவரும் அசத்தினர். ஆஸ்திரேலிய அணி அப்படி ஒரு அற்புதமான அடித்து விளாசும் வீரர்களைக் கொண்டது. அவர்களுக்கே தண்ணி காட்டிவிட்டனர் இருவரும். இவர்கள் இருவரும் தான் தற்போதைய உலகின் மிகச்சிறந்த டெத் பௌலர்களாவர்.
என இருவரையும் புகழ்ந்து தள்ளினார் ரோகித் சர்மா
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில் நவம்பர் 1ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்குகிறது.
முதல் போட்டி டெல்லியிலும், இரண்டாவது போட்டி ராஜிகோட்டிலும், மூன்றாவது போட்டி புதிய மைதானமான திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியுடன் அனுபவ பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்.