ஜெயிக்ரது ஒருபக்கம் இருக்கட்டும் முதல்ல இத செய்ங்க; ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம், ரோகித் சர்மா உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதில் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது, இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜெயிக்ரது ஒருபக்கம் இருக்கட்டும் முதல்ல இத செய்ங்க; ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !! 2

அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணியையும், சிறப்பாக செயல்படும் வீரர்களையும், இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டனையும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

என்னதான் இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் தீபக் சஹர், சூரியகுமார்,ருத்ராஜ் மற்றும் கே எல் ராகுல் போன்ற சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு கொண்டு உள்ளனர், இதனால் இந்திய அணி புதுப்புது வீரர்களை ஒவ்வொரு போட்டியிலும் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது, இப்படி செய்தால் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்க முடியாது என்று பலரும் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கினார்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரிம் செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மாவிற்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

ஜெயிக்ரது ஒருபக்கம் இருக்கட்டும் முதல்ல இத செய்ங்க; ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !! 3

அதில்,“ தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஹித் சர்மாவின் ஒரே குறிக்கோளாக எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரும் அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரும் தான் இருக்க வேண்டும்.இதனால் இதற்கான இந்திய அணியை ரோகித் சர்மா கட்டமைக்க வேண்டும், தற்போது ரோகித் சர்மாவிற்கு அந்தளவு நேரம் கிடையாது மிகக்குறுகிய நேரத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்து இந்திய அணியில் விளையாட வைத்து, திறமையை பரிசோதித்து உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும், தற்போதைய இந்திய அணியின் மிகப் பெரும் சிக்கலாக இருப்பது இந்திய வீரர்களின் உடற்தகுதி தான் பெரும்பாலான வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு ஓய்வில் உள்ளனர், இதை கூடுதல் கவனம் கொண்டு ரோஹித் சர்மா கையாளவேண்டும்” என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *