மொகாலியில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா – இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. மொகாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். அவர் 208 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தது.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இந்த இரட்டை சதத்தால் ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்திலும், ஏபி டி வில்லியர்ஸ் 2-வது இடத்திலும், டேவிட் வார்னர் 3-வது இடத்திலும், பாபர் ஆசம் 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர். ஜோ ரூட் 1 இடங்கள் பினதங்கி 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளா்.
பந்து வீச்சு தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 759 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இம்ரான் தஹிர் 2-வது இடத்திலும், பும்ரா 3-வது இடத்திலும், ஹசில்வுட் 4-வது இடத்திலும், ரபாடா 5-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் 16 இடங்கள் முன்னேறி 56வது இடத்தில் இருக்கிறார்.
அணிகள் தரவரிசையில் இந்தியா ஒரு புள்ளியை இழந்து 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.