நியூசிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர் ராஸ் டைலர் அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
இங்கிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர் டெய்லர் நியூசிலாந்து அணிக்காக மூன்று விதமான தொடர்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு பல முறை நியூசிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தனது அபாரமான பேட்டிங் திறமை மூலம் நியூசிலாந்து அணி இக்கட்டான நிலையில் இருக்கும்பொழுது தனது அனுபவத்தாலும் அதிரடி ஆட்டத்தாலும் நியூசிலாந்து அணியை பலமுறை சரிவிலிருந்து மீட்டெடுத்த நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் ராஸ் டெய்லர் கடைசியாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.
நியூசிலாந்து அணியில் உருவான ஜாம்பவான்களில் ஒருவரான ராஸ் டைலர் டெஸ்ட் தொடரில் 7584 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் தொடரில் 17 ஆண்டுகள் தனது பயணத்தைத் தொடர்ந்த ராஸ் டைலர் தனது அதிகாரப்பூர்வமான ஓய்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் , நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பின் இன்று நான் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அறிவிக்கிறேன், எனது 17 வருட கிரிக்கெட் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி, மேலும் எனது அணிக்காக விளையாடியது நினைத்து நான் கவலைப்படுகிறேன் என்று ராஸ் டைலர் அதில் தெரிவித்த்ருந்தார்.
ராஸ் டெய்லரின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது, ரசிகர்கள் அனைவரும் எதிர்கால வாழ்க்கைக்கு தங்களது பாராட்டுகளை வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.