இவரை கண்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள் – சீக்ரெட்டை புட்டுவைத்த நியூசிலாந்து வீரர்!
இந்த இந்திய வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்ள நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்று திணறுகிறார்கள் என ஓப்பனாக கூறியுள்ளார் நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டைலர்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என வென்றது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. அதன்பிறகு, தற்போது டெஸ்ட் தொடருக்காக பயிற்சி செய்து வருகிறது. 21ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 29ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.
இந்திய அணி தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக, இதுவரை ஆடிய 7 டெஸ்ட் போட்டிகளில் அனைத்தையும் வென்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில கம்பீரமாக நீடிக்கிறது. இரண்டாவதாக, 10 போட்டிகளில் 7 வெற்றி மற்றும் ஒரு ட்ரா என 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இந்திய அணியின் இத்தகைய ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்குவது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாகும். இஷாந்த் சர்மா, சமி, உமேஷ் யாதவ், பும்ராஹ் ஆகிய நால்வரும் எதிரணிக்கு அச்சுறுத்தலாகவே திகழ்கின்றனர்.
லிமிடெட் ஓவர்களில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்து வரும் பும்ராஹ், ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் போனது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவை தந்திருக்கிறது. ஆனாலும், அவர் ரன்களை வாரி வழங்காமல் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.
தற்போது டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து ராஸ் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
“பும்ராஹ்வை எதிர்கொள்வது சற்று கடிமான ஒன்று. சுதாரித்து ஆடவேண்டும். இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோசமானவர். அதேபோல, இந்திய அணியின் பேட்டிங் உலக தரம். இவற்றை சமாளிப்பது எங்களுக்கு எளிதல்ல. ஆனால், நங்கள் எங்களது முழு ஆட்டத்திலும் கவனத்தை செலுத்தினால் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.” என்றார்.