புதிய சேலஞ்சை உருவாக்கிய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்
மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் உடற்பயிற்சி சவால் ஒன்றைத் தொடங்கியது போல, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினும் புதிதாக சவால் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர், கடந்த சில வாரங்களுக்கு முன் ‘ஹம் பிட் தோ இந்தியா பிட்’ என்ற சேலஞ்சை உருவாக்கினார். ஒவ்வொருவரும் உடற்பயிற்சி மேற்கொண்டு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே, இந்த சேலஞ்சின் முக்கிய குறிக்கோள்.
அதன்படி, உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரதோர், அதில் விராத் கோஹ்லி உள்ளிட்ட பிரபலங்களை இணைத்து, அவர்களிடம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடும்படி சவால் விட்டார். இது ஒரு சங்கிலி நிகழ்வு போல தொடர்ந்து, பிரதமர் முதல் அனைத்து பிரபலங்களும் தங்கள் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட வழிவகை செய்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சினும் புதுவகையான சவால் ஒன்றை உருவாக்கி உள்ளார். ‘கிட் அப் சேலஞ்ச்’ என்றழைக்கப்படும் அந்த சவாலின்படி, அனைவரும் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடும் வீடியோவை வெளியிட வேண்டும்.
I'm kitting up to go play the sport I love. Share a video of you playing the sport you love.
I nominate, @SandeshJhingan, @imsardarsingh8, @imVkohli, @M_Raj03, @srikidambi, @Pvsindhu1, @yesmrinmoy & @NavaniRajan.@PMOIndia #HumFitTohIndiaFit #KitUpChallenge #SportPLAYINGIndia pic.twitter.com/ZySVUBQq5e
— Sachin Tendulkar (@sachin_rt) June 28, 2018
விராத் கோலி, சர்தார் சிங், பிவி சிந்து, மிதாலி ராஜ், விஜேந்தர் சிங், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களை இணைத்து, சச்சின் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அனைவரும் உடல் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக இருப்பதுடன், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த சவாலை உருவாக்கியதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.