இறக்க குனம் நிறைந்த சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் வீடியோ !! 1
இறக்க குனம் நிறைந்த சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் வீடியோ

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்  தனது வீட்டின் பால்கனியில் அடிபட்டு கிடந்த பறவைக்கு உணவளித்து, அதை மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் கடவுளாக பார்க்கப்படுபவர், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் ஓய்வுபெற்றிருந்தாலும், அவரின் புகழானது இன்றளவும் வானளவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அவரது வீட்டின் பால்கனியில் கரும்பருந்து ஒன்று, மிகவும் மோசமான நிலையில் அடிபட்டு கிடந்துள்ளது. இதையடுத்து, சச்சின் டெண்டுல்கர் அந்தப் பருந்துக்கு தண்ணீர் வைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அந்தப் பருந்து அதைப் பருகாமல் இருந்துள்ளது.

இறக்க குனம் நிறைந்த சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் வீடியோ !! 2

இதன்பின் சச்சின், பிரெட் மற்றும் சிக்கன் துண்டுகளை அதற்கு வழங்கியுள்ளார். அதை அந்தப் பருந்து, தட்டுத் தடுமாறி சாப்பிட்டது. அதன் நிலையை உணர்ந்த சச்சின், தனது வீட்டிற்கு விலங்கு ஆர்வலர்களை அழைத்து, அதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதுக்குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், வாயில்லா ஜீவன்கள் அடிப்பட்டிருந்தாலோ, உயிருக்கு போராடினாலோ, அவற்றிக்கு மக்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, சச்சினின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *