டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்தி ரங்கானா ஹெராத் சாதனை: சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்திய இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்திற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ணனி வீரரான ரங்கானா ஹெராத், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது 400-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

மேலும், டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது ஸ்பின்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் இலங்கையின் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாரன் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

டெஸ்டில் 400 விக்கெட்டை கைப்பற்றிய 5-வது சுழற்பந்து வீரர் ஹெராத் ஆவார். மேலும் 400 விக்கெட் வீழ்த்திய முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில், ஹெராத்திற்கு சச்சின் டெண்டுல்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதிப் படையான இலங்கை அணியின் வீரர் இத்தகைய சாதனை புரிந்தது மிகவும் மகிழ்ச்சி. ரங்கானா ஹெராத்திற்கு எனது வாழ்த்துக்கள் என சச்சின் டுவிட் செய்திருந்தார்.

இதேபோல் ஹெராத்தின் சாதனைக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.