நான் பார்த்ததிலேயே இந்த இந்திய வீரர் தான் மிகவும் அபாயகரமானவர் - பாகிஸ்தான் வீரர் ஷாதாப் கான் 1

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் வயது கிரிக்கெட் வீரர் ஷாதாப் கான் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர். பாகிஸ்தான் அணிக்காக தற்போதுவரை 97 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அணிக்கு தேவைப்படும் நேரங்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் மற்றும் பௌலிங் செய்வதோடு மட்டுமல்லாமல் மிக சிறப்பாக பீல்டிங் செய்து பல ரன்களை தடுத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அதிக அளவில் காணப்படும் இவர் சமீபத்தில் கேள்வி மற்றும் பதில் உரையாடலை நிகழ்த்தினார். அதில் இரண்டு முக்கிய கேள்விகளாக பார்க்கப்பட்டது நீங்கள் பந்துவீச பயப்படும் ஒரு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு பந்து வீச்சாளரை நீங்கள் சந்திக்க பயப்படுவது யார் என்பதுதான்.

நான் பார்த்ததிலேயே இந்த இந்திய வீரர் தான் மிகவும் அபாயகரமானவர் - பாகிஸ்தான் வீரர் ஷாதாப் கான் 2

நான் சந்தித்ததிலேயே மிக அபாயகரமான பேட்ஸ்மேன் ரோகித் சர்மா

முதல் கேள்விக்கு அவர் பந்து வீச பயப்படுவது நம் இந்திய ஓபனிங் வீரர் ரோகித் சர்மா என்று கூறியுள்ளார். ரோகித் சர்மா கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு போட்டியிலும் இவரது பந்துகளை ரோகித் சர்மா மிக எளிதாக கையாண்டு விளையாடினார்.

அதன் காரணமாகவே ஷாதாப் கான் ரோகித் சர்மா பெயரை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஸ்பின் பவுலர்களை ரோகித் சர்மா அலட்சியமாக சந்தித்து, அவர்களது பந்துகளை தூக்கி அடிப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே இவர் ரோஹித் பெயரை கூறியது சரிதான் என்ற ரசிகர்கள் இவரது பதிலுக்கு கீழ் கமெண்ட் செய்திருந்தனர்.

நான் சந்திக்க பயப்படும் ஒரு பவுலர் லோக்கி பெர்குசன்

இரண்டாவது கேள்விக்கு தான் சந்திக்க பயப்படும் ஒரு பவுலர் நியூசிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில் லோக்கி மிக வேகமாக வந்து பந்துகளை வீசுவார் அதிலும் பல வேரியேஷன்களை அவர் தனது பந்து வீச்சில் காட்டுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் பார்த்ததிலேயே இந்த இந்திய வீரர் தான் மிகவும் அபாயகரமானவர் - பாகிஸ்தான் வீரர் ஷாதாப் கான் 3

குறிப்பாக 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஒருநாள் போட்டியில் லோக்கி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் ஒரே போட்டியில் கைப்பற்றிய 5 விக்கெட்டுகள் அந்த போட்டி மட்டுமே. எனவே இதன் காரணமாகவே லோக்கி பெர்குசன் பெயரை ஷாதாப் கூறியிருக்கிறார்.

ஷாதாப் தற்போது இஸ்லாமாபாத் அணிக்கு கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீண்டும் நடைபெற உள்ளதால் அந்த தொடருக்கு இவர் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *