உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது கடினம் தான் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் சிறந்த அணிகளான ஒன்பது அணிகள் பங்குபெறும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2019 முதல் 2021 டெஸ்ட் தொடருக்கான போட்டியில், முதல் இரண்டு இடத்தை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இந்திய அணி இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாடியது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நியூசிலாந்து அணியிடம் மிக மோசமாக தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் 2021-2023க்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளி பட்டியல் சில தினங்களுக்கு முன் ஐசிசியால் வெளியிடப்பட்டது, இதில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது.
என்னதான் ஒருபுறம் டி20 உலக கோப்பை தொடர் குறித்து பேசி வந்தாலும் கிரிக்கெட்டின் அஸ்திவாரமாக திகழும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் என்னதான் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளுமே தகுதி பெறாது என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாட்சன் தெரிவித்ததாவது, “தற்பொழுது உள்ள நிலையை வைத்து பார்க்கும் பொழுது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேறுவது கடினம் தான், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவிர்த்து இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணி மிகச் சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறது, ஆனால் ஒட்டுமொத்த போட்டியை வைத்து பார்க்கும் பொழுது தென்னாபிரிக்க அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெறுவது கடினம், இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது,அதேபோன்று இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளை குறைத்து மதிப்பிட கூடாது,இந்த இரண்டு அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் தொடர்களில் வெற்றிகளை குவித்து வருகிறார்கள்.இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று ஷேன் வாட்சன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.