ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட் கோலியின் அடுத்தடுத்து இரண்டு சாதனைகளை முறியடித்து புதிய ரெக்கார்ட் படைத்திருக்கிறார் ஷிக்கர் தவான்.
இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடைபெற்று வரும் எட்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் இருவரும் அபாரமாக விளையாடினர்.
இதில் ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்திருந்தார். இப்போட்டியில் ஷிக்கர் தவான் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 50ஆவது அரைசதத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் 50 அரைசதங்கள் எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இதே சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் 50 அரைசதங்களை பூர்த்தி செய்திருந்தார்.
தற்போது ஷிக்கர் தவான் இரண்டாவது வீரராக இதை செய்து காட்டியிருக்கிறார். மேலும் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இவர் 207 இன்னிங்ஸ்களில் 50 அரைசதங்கள் அடித்திருக்கிறார். விராட் கோலி 216 இன்னிங்ஸ்களில் இதை செய்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஷிக்கர் தவான் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 132 இன்னிங்ஸ்களில் 50 அரைசதங்கள் அடித்து கம்பீரமாக முதல் இடத்தில் இருக்கிறார் டேவிட் வார்னர்.
ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் அதிவேக 50 அரைசதங்கள் அடித்த வீரர்கள்:
1. டேவிட் வார்னர் – 132 இன்னிங்ஸ்கள்
2. ஷிக்கர் தவான் – 207 இன்னிங்ஸ்கள்
3. விராட் கோலி – 215 இன்னிங்ஸ்கள்
இன்றைய போட்டி சுருக்கம்..
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் பிரப்சிம்ரன் 60 ரன்கள், ஷிக்கர் தவான் 86 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்ஸ் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்தது பஞ்சாப் அணி.
கடினமான இலக்கை சேஸ் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே அடித்து தடுமாறி வருகிறது.