இந்திய அணியின் நட்சத்திர தொடக்கவீரர் ஷிகர் தவான், உடல்நலம் சரியில்லாத தன் அம்மாவை பார்க்க இந்தியாவுக்கு செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அனுமதித்தது.
தற்போது இந்திய அணி இலங்கையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 4 – 0 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரை வென்றது, இதனால் தவானுக்கு பதிலாக இந்திய அணியில் யாரையும் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் தவான், இந்த தொடரில் இரண்டு போட்டியில் தான் ஜொலிக்கவில்லை.
“உடல்நலம் சரியில்லாத தன் அம்மாவை பார்க்க இந்தியாவுக்கு செல்ல தவானுக்கு அனுமதி கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம். அவருடைய அம்மா நன்றாக குணமடைந்து வருகிறார்,” என பிசிசிஐ கூறியது.
மீதம் ஒரே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகள் மட்டும் இருப்பதால், தவானுக்கு மாற்று வீரராக யாரையும் அறிவிக்கவில்லை. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
வந்த வேகத்தில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, அடுத்து விளையாடி கொண்டிருக்கும் ஒருநாள் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது. மீதம் உள்ள ஒரு போட்டியையும் வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. பிறகு, இரு அணிகளும் மோதப்போகும் ஒரே ஒரு டி20 தொடரை, இலங்கை அணி வெல்ல காத்திருக்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடியுள்ளார். கடந்த இரண்டு போட்டிகளை தவிர்த்து, மற்ற போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். தன் அம்மாவை பார்க்க இந்தியா செல்லும் தவான், இந்தியாவின் அடுத்த தொடரில் பங்கேற்பார்.