தோனி, கோலி,ரோஹித் ஷர்மா கிடையாது; இந்த இளம் இந்திய வீரர் தான் என்னுடைய ஃபேவரைட் கேப்டன்; தைரியமாக பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் !! 1

கேஎல் ராகுல் தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்ற காரணத்தால், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக அதிரடி வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார்.

தோனி, கோலி,ரோஹித் ஷர்மா கிடையாது; இந்த இளம் இந்திய வீரர் தான் என்னுடைய ஃபேவரைட் கேப்டன்; தைரியமாக பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் !! 2

கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க படையை ஒரு போட்டியிலாவது வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒருநாள் தொடரில் 3-0 என படு மோசமாக தோல்வியைத் தழுவியது. அதேபோன்று கேஎல் ராகுல் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இதனால்,இந்திய அணிக்கு கேப்டன் பதவியேற்ற முதல் தொடரிலேயே கே எல் ராகுலின் மோசமான கேப்டன்ஷிப்பால்,தனது அணிக்கு ஒரு வெற்றியைப் கூட பெற்றுக் கொடுக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

கே எல் ராகுல் மோசமான கேப்டன் என்று அனைவரும் விமர்சித்தாலும் கேஎல் ராகுல் தான் என்னுடைய விருப்பத்திற்குரிய கேப்டன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கிளப் கவுசில்(club house) பேசியுள்ளார்.

தோனி, கோலி,ரோஹித் ஷர்மா கிடையாது; இந்த இளம் இந்திய வீரர் தான் என்னுடைய ஃபேவரைட் கேப்டன்; தைரியமாக பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் !! 3

கேஎல் ராகுல் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், “ராகுலின் தலைமையின் கீழ் விளையாடியது நன்றாக இருந்தது, முதலில் ராகுல் ஒரு சிறந்த வீரர், அவருடைய தன்னம்பிக்கையும் அவர் அணியை வழிநடத்திய விதமும்,அணியில் பேசிய விதமும் மற்ற வீரர்களுக்கு உறுதுணையாக இருந்த விதமும் மிகவும் சிறப்பாக இருந்தது, ராகுல் மிகவும் பொறுமையாகவும் சிறப்பாகவும் அணியை வழி நடத்தினர், களத்தில் அவருடைய முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருந்தது, ராகுலின் தலைமையின் கீழ் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது இன்னும் சொல்லப்போனால் அவர் எனக்கு மூன்று ஓவர்கள் பந்து வீசுவதற்கு வாய்ப்பளித்தார் இதற்கு முன் எந்த ஒரு கேப்டனும் எனக்கு இந்த வாய்ப்பு அளிப்பதில்லை, இதன் காரணமாகதான் கேஎல் ராகுல் என்னுடைய விருப்பத்திற்குரிய கேப்டனாக உள்ளார் என்று ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *