ஜட்டு என்னை மன்னிச்சிருப்பா... உன்னோட மேன் ஆப் தி மேட்ச்ச நான் திருடிட்டேன்! - 48ஆவது சதமடித்த குஷியில் விராட் கோலி! 1

“ஜடேஜாவின் ஆட்டநாயகன் விருது நான் திருடிவிட்டேன். அதற்காக அவர் என்னை மன்னித்துவிட வேண்டும்.” என்று ஆரம்பித்த விராட் கோலி, மேலும் சில விஷயங்களை சதமடித்த மகிழ்ச்சியில் ஆட்டநாயகன் விருது பெற்றபோது பகிர்ந்து கொண்டார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற இந்திய அணியின் நான்காவது லீக் போட்டியில் வங்கதேச அணியினர் முதலில் பேட்டிங் இறங்குவதாக அறிவித்தனர்.

வங்கதேச அணியின் துவக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் அடித்து அபாரமாக துவங்கி வைத்தது. தன்ஷித் ஹாசன் 51 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் லிட்டன் தாஸ் 66 ரன்கள் அடித்து அவுட்டாக, அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

ஜட்டு என்னை மன்னிச்சிருப்பா... உன்னோட மேன் ஆப் தி மேட்ச்ச நான் திருடிட்டேன்! - 48ஆவது சதமடித்த குஷியில் விராட் கோலி! 2

மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்கள் முசுபிக்குர் ரஹீம் 38 ரன்கள், மஹ்மதுல்லா 46 ரன்கள் அடிக்க வங்கதேசம் அணி 200 ரன்கள் கடக்க முடிந்தது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்க்கு 256 ரன்கள் அடித்தது.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க ஜோடி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து 88 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா துரதிஷ்டவசமாக 48 ரன்களுக்கு அவுட் ஆனார். அரை சதம் கடந்த சுப்மண் கில் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.

ஜட்டு என்னை மன்னிச்சிருப்பா... உன்னோட மேன் ஆப் தி மேட்ச்ச நான் திருடிட்டேன்! - 48ஆவது சதமடித்த குஷியில் விராட் கோலி! 3

அடுத்து வந்த விராட் கோலி நிதானமாக விளையாட ஆரம்பித்து கடைசியில் அதிரடி காட்ட 97 பந்துகளுக்கு சதம் விளாசி ஒரு நாள் போட்டிகளில் 48வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி(103) மற்றும் கே எல் ராகுல்(34) இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

ஜட்டு என்னை மன்னிச்சிருப்பா... உன்னோட மேன் ஆப் தி மேட்ச்ச நான் திருடிட்டேன்! - 48ஆவது சதமடித்த குஷியில் விராட் கோலி! 4

விராட் கோலி பேசியதாவது:

“ஜடேஜாவிடம் இருந்து இந்த ஆட்டநாயகன் விருதை திருடியதற்கு என்னை மன்னித்து விட வேண்டும், ஏனெனில் அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று நானும் முயற்சி செய்தேன். கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் போராடினேன். அதைத்தான் கடந்த பல வருடங்களாக நான் அணிக்காக செய்து வருகிறேன்.

எனக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. இரண்டு நோ-பால் வீசி, அதில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து ஆரம்பித்தது சிறப்பாகவே இருந்தது. இந்த மைதானம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. நான் என்னுடைய நேரத்தை எடுத்துக் கொண்டு விளையாடினேன். சரியான நேரத்தில் பந்தை டைமிங் செய்தேன் மற்றும் எங்கே காலியிடங்கள் இருக்கிறதோ அங்கே ரன்களை அடிக்கவும் முடிந்தது.

ஜட்டு என்னை மன்னிச்சிருப்பா... உன்னோட மேன் ஆப் தி மேட்ச்ச நான் திருடிட்டேன்! - 48ஆவது சதமடித்த குஷியில் விராட் கோலி! 5

அணியின் மத்தியில் சிறந்த சூழல் நிலவுகிறது. ஒருவருக்கு மற்றொருவர் நன்றாக உதவி செய்து ஒட்டுமொத்த அணியின் செயல்பாடாகவே இது இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் முழு ஆட்டத்தை வெளிப்படுத்தவும் முடிகிறது. இதுபோன்ற மிகப்பெரிய தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு சூழலும் முக்கியம். அதை களத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பெரிதாக்கினால் மட்டுமே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

ஒவ்வொரு மைதானத்திலும் விளையாடும் பொழுது எனது சொந்த ஊரில் விளையாடும் அனுபவத்தை ரசிகர்கள் கொடுக்கின்றனர். ஆகையால் அதை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் நானும் முயற்சி செய்கிறேன்.” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *