’சொந்த மண்ணில் எந்த அணி எதிர்த்தாலும் இந்திய அணி தான் வெற்றி பெரும்,’ என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
’சொந்த மண்ணில் எந்த அணி எதிர்த்தாலும் இந்திய அணி தான் வெற்றி பெரும்,’ என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1-1 என சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, வரும் 29ல் கான்பூரில் நடக்கிறது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில்,’ இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரிலேயே சிறப்பாக செயல்பட்டது. தொடர் வெற்றிகளை குவித்தது. இது சாதாரண விஷயமல்ல. வெவ்வேறு அணிகளுக்கு எதிராக வெற்றிகளை குவிப்பது எளிதல்ல. எங்கள் காலத்தில் இருந்த அணியைவிட தற்போதுள்ள அணியே சிறந்தது.’ என்றார்.