ஆஸ்திரேலியாவுடனான தொடரை இந்திய 4-1 என்ற கணக்கில் வெல்லும்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும்.
ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் ஆஸ்திரேலியா வலுவான அணி.
நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்க விரும்புகிறார்கள். 2019-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
உலக கோப்பைக்கு தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. அணியை வலுப்படுத்த ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுப்பது அவசியமாகும்.’ என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில்,
‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி ஆஸ்திரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது.
இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை.
கோலியும், ஸ்டீவன் சுமித்தும் நவீன கால கிரிக்கெட்டில் சிறந்தவர்கள். அவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்உதாரணமாக அமைந்திருக்கிறது.
களம் இறங்கி விட்டால் வெற்றி மட்டுமே நோக்கம்.
இங்கு நட்பாக இருக்க வேண்டிய தேவையே இல்லை. இருவரும் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றிக்காக முயற்சிப்பார்கள்.
கடுமையாக மோதிக்கொள்ளும் போது போட்டி கடுமையாக இருக்குமே தவிர, நட்புக்கு இடம் இருக்காது.
கோலியும், ஸ்டீவன் சுமித்தும் இளம் வீரர்கள். ஆனால் டெஸ்ட் தொடரின் போது சுமித்தின் கேப்டன்ஷிப் மெச்சும்படி இல்லை.
டோனி போன்ற வீரர்கள் அணியில் இருப்பது கோலிக்கு சாதகமான அம்சமாகும். முன்மாதிரியாக இருக்கும் கோலியே, தற்போதைய கட்டத்தில் சுமித்தை விட சிறந்த கேப்டன் ஆவார்’ என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தனது கணிப்பை வெளியிட்ட வி.வி.எஸ்.லட்சுமண், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி ஆஸ்திரேலியா என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது.
இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும்’ என்று தனது கணிப்பை வெளியிட்டார்.
மேலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கோலியே, தற்போதைய கட்டத்தில் சுமித்தை விட சிறந்த கேப்டன் ஆவார் என்றார்.
இந்நிலையில் லட்சுமணனின் கருத்திற்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பதிலடி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், கோலி மற்றும் ஸ்மித் இருவரில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. ஆஸ்திரேலியாவுடனானஇறுதியில் யார் அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய கேப்டனாக இருக்கிறார் என்பதே முக்கியமாகும் என்றார்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என கிளார்க் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.