தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அடுத்த தொடரும் ஒத்தி வைப்பு ; கவலையில் ரசிகர்கள் !! 1

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அடுத்த தொடரும் ஒத்தி வைப்பு ; கவலையில் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் மாதம் நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் உள்ளது. இங்கிலாந்து – இலங்கை, இந்தியா- தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா – நியூசிலாந்து தொடர்கள் இடையில் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அடுத்த தொடரும் ஒத்தி வைப்பு ; கவலையில் ரசிகர்கள் !! 2
South Africa’s players celebrates the wicket of England’s Joss Buttler during the 2nd T20 International Cricket match between South Africa and England held at the Hollywood bets Kingsmead Stadium in Durban on 14 February 2020. (Photo by Anesh Debiky / AFP) (Photo by ANESH DEBIKY/AFP via Getty Images)

ஜூன் மாதத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்த தொற்று எப்போது கட்டுக்குள் வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

இதனால் ஜூன் மாதம் கிரிக்கெட் தொடங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்தது. தற்போது இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *