தற்போது இந்தியா அணி இலங்கை அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது, இதில் நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக படு தோல்வி அடைந்து உள்ளது.
இதனால் இலங்கை அணி கண்டும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது, டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலைமையில் இந்தியா இலங்கை அணிகள் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது, இதில் மொத்தம் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாட.
இதில் வெற்றி பெற வேண்டும் என்றால் இலங்கை அணியின் வீரர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்று இலங்கை அணியின் ஒரு நாள் தொடரின் கேப்டன் ஆன உபுல் தரங்க கூறியுள்ளார்.
இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்க பேசியது :
” இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி உள்ளது இதனால் தான் இந்திய அணிக்கு எதிராக படு தோல்வி அடைந்து உள்ளது, ஆனால் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி மோசமாக செயல் படாது.
இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுக்க இலங்கை அணி ஒரு நாள் போட்டியில் தயாராக உள்ளது, இந்திய அணியை ஒரு நாள் போட்டிகளில் வெல்ல இலங்கை அணி வீரர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், அவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த தொடரிலும் இலங்கை அணி தோல்வி அடையும்.
எனவே இலங்கை அணி வீரர்களின் ஒத்துழைப்புடன் இந்திய அணியை ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற நாங்கள் தயாராக உள்ளோம்” இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்க கூறியுள்ளார்.
வரும் 20ஆம் தேதியில் இருந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இலங்கை அணி கடந்த ஒரு நாள் தொடரில் ஜிம்பாபே அணியுடன் விளையாடியது இதில் இலங்கை அணி ஜிம்பாபே அணியுடன் ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிட்ட தக்கது.