ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து இவற்றில் ஒரு அணி தான் வருகிற 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை வெல்லப்போகிறது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹர்மிசன் கூறியுள்ளார்.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சமீபத்திய ஐந்து போட்டிகளில் 2-2 என சமன் செய்தது.
2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதன் மூலம், ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடைசி 58 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 43 ஐ வென்றுள்ளது.
இதற்கிடையில், ஆஸ்திரேலியா அனைத்து நாடுகளிலும் ஆடி வந்தாலும் இது ஒரு மோசமான ஆண்டாக தோற்றமளித்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் உள்ளது.

இங்கிலாந்து ஹீரோ ஹர்ம்சிசன் பத்திரிக்கை ஒன்றில் கூறினார் : ‘நீங்கள் இந்தியாவை குறைத்து எடைபோட இயலாது. உலகெங்கிலும் சென்று சிறந்த கிரிக்கெட்களை அவர்கள் விளையாடியுள்ளார்கள், ஆனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டும் எனக்கு விருப்பமான அணிகள் என்று நான் நினைக்கிறேன்.
‘இங்கிலாந்தின் கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக சிந்த நாட்டில் எப்படி விளையாடியது என்பதைப் பாருங்கள். அவர்கள் சிறப்பாக ஆடினாலும் சற்று அதிஷ்டமும் வேண்டும் என நான் நம்புகிறேன். அப்படி இருந்தால் நிச்சயம் வெற்றி இங்கிலாந்திற்கு தான்’

‘இப்போது அவர்கள் இன்னும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒரு பிட்ச்சில் விளையாடுவார்களானால், முன்பைப்போல இம்முறை இங்கிலாந்தை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.
‘அப்போது அவர்கள் குழப்பத்துடனும், உதவியை எதிர்ப்பார்த்தும் இருந்தனர். ஆனால் இப்போது வித்தியாசமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அவர்கள் இப்போது ஒரு வித்தியாசமான அணியாக இருக்கிறார்கள், அவர்கள் நிறைய கற்றுக்கொண்டார்கள்.
அதனால் தான் அவர்கள் ஏன் பிடித்தவர்கள் என்று நினைக்கிறேன். அடுத்ததாக எனக்கு பிடித்தவர்கள் ஆஸ்திரேலியா ‘