ஆஸ்திரேலிய

ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் எறியப்பட்டது?

ஆஸ்திரேலிய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2ஆவது டெஸ்ட் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹோட்டலுக்கு சென்ற பேருந்தில் கல் எறியப்பட்டதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய

அவர்கள் சென்ற பேருந்தின் சன்னல் கண்ணாடி உடைந்துள்ளது. இதனை வைத்து கல் எறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் வீரர்கள் யாருக்கும் எந்த காயம் இல்லை எனவும், ஆனால் சன்னல் கண்ணாடடி மட்டும் உடைப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருவதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

மேலும் அவர்கள் கூறுகையில்,

யாராவது குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எறிந்திருக்கலாம். ஆதிரேலிய வீரர்கள் சென்று வரும் பாதையில் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறோம். இரு அணியினரும் பத்திரமாக ஹோட்டல் திரும்பிவிட்டனர்.

எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி பாதுகாப்ப்பு காரண்ங்களுக்காக வங்க தேச சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *