மைக்கேல் ஹஸி வாயை மூடினால் நல்லது ; கடுப்பான கவாஸ்கர் 1

மைக்கேல் ஹசி தற்பொழுது இந்தியாவில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரே பாதியில் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு இறுதியில் நிச்சயமாக இந்தியாவில் வைத்து உலக கோப்பை டி20 தொடர் பாதுகாப்பாக நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது தரப்பு வாதத்தை கூறியுள்ளார்.

முதலில் மைக்கல் ஹசி பொறுமையாக இருக்க வேண்டும்

இந்தியாவில் தற்பொழுது நிலைமை சரி இல்லை என்பது உண்மைதான் ஆனால் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இன்னும் நான்கு முதல் ஐந்து மாத காலம் இருக்கிறது. எனவே நிலைமையை பொறுத்திருந்து பார்த்து அதன் பின்னர் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

மைக்கேல் ஹஸி வாயை மூடினால் நல்லது ; கடுப்பான கவாஸ்கர் 2

சென்ற ஆண்டு இறுதியில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்பொழுது நாங்கள் எந்த விதத்திலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை குறை கூறவில்லை. எனவே அதே போல நீங்களும் நடந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்திய அணி நிர்வாகம் உலக கோப்பை தொடரை நடத்த ஆவலாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை நிலைமையைப் பார்த்து முடிவு எடுக்கப்படும்

தற்பொழுது இந்தியாவில் படிப்படியாக கொரோனா எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது இருந்தாலும் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை இந்தியா எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்கு அடுத்த மாதங்களில் உலக கோப்பை தொடரை நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

IPL 2021: Chennai Super Kings' batting coach Mike Hussey eventually leaves  for Australia - Asume Tech

ஒருவேளை இந்தியாவில் வைத்து நடத்த முடியவில்லை என்றால் நிச்சயமாக அதை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

தற்பொழுது ஐபிஎல் தொடர் சென்ற ஆண்டு இறுதியில் நடந்ததைப் போல் வருகிற செப்டம்பர் மாதத்தில் துவங்கி அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *