முதலிடத்தை விட்டு கொடுக்காத மிரட்டல் நாயகன் சூர்யகுமார் யாதவ்…டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது
சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகான, சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த மிரட்டல் நாயகன் சூர்யகுமார் யாதவ், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
சூர்யகுமார் யாதவிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் அசாம், டீவன் கான்வே மற்றும் மார்கரம் ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் ஹசரங்கா முதலிடத்தில் உள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் அடில் ரசீத் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதே போல் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் முதல் இடத்தில் உள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.