இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
டி.20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்படும் இந்திய கிரிக்கெட் அணி, நடப்பு டி.20 தொடரை தோல்வியுடன் துவங்கியுள்ளது. அதிலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே வெறித்தனமாக காத்திருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் நாளை (அக்டோபர் 31) இரவு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று இந்திய அணி தீவிர முனைப்போடு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று முடிந்தாலும் அது சம்பந்தமான பேச்சுக்கள் இன்றளவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடையே பேசு பொருளாக உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய அவர், டி20 தொடரில் அதிவேக ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணி கேப்டன் முன்னிலை வகிக்கிறார்,இதற்கு முன் அந்த சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்திருந்தார், விராட் கோலி எந்தெந்த சாதனை எல்லாம் செய்தாரோ அதனை எல்லாம் பாபர் அசாம் முறியடித்து வருகிறார், பாபர் அசாம் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று அவரை ஆகாஷ் சோப்ரா பாராட்டி பேசினார்.

மேலும் பேசிய அவர், பாபர் அசாம் மிக சிறந்த முறையில் விளையாடுகிறார் அவருடைய துவக்க ஜோடி முஹம்மது ரிஸ்வான் தனது விக்கெட்டை சீக்கிரமாக இழந்தாலும் அதற்குப்பின் களமிறங்கும் ஃபக்கார் சமானுடன் மிக சிறந்த முறையில் கூட்டணி வைத்து விளையாடுகிறார், ஃபக்கர் சமானும் தனது விக்கெட்டை இழந்து விட்டால் அதற்குப்பின் பாபர் அசாம் மிக சிறந்த முறையில் பாகிஸ்தான் அணிக்காக ரங்களை குவிக்கிறார் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது