ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே அரையிறுதி சுற்றில் இந்த நான்கு அணிகள் தான் போதும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
நடப்பு உலகக் கோப்பை தொடர் துபாய் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் அனைத்து அணிகளும் எப்படியாவது கோப்பை வென்று விட வேண்டுமென்று கடுமையாக சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறது.
களத்திற்குள் வீரர்கள் சண்டை போட்டாலும் களத்துக்கு வெளியே கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எந்த அணி வெற்றி பெறும், எந்த அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி அரையிறுதி சுற்றில் பங்குபெறும் என்று தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று பதிவிட்டுள்ளார். ஷேன் வார்ன்வின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அவருடைய கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் நிச்சயம் கீழ் குறிப்பிட்டுள்ள அணிகள் தான் ஒவ்வொரு குரூப்பின் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள். அதில் குரூப் 1 இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அதே போன்று பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
மேலும் அதனை தொடர்ந்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணியின் மற்றுமொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மோதும் என்றும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.
I still believe the teams that will top each group & make it through will look like this, plus semi’s & final…
— Shane Warne (@ShaneWarne) October 30, 2021
1.England
2. Australia
1.Pakistan
2. India
Semi’s
Eng V India
Aust V Pak
So final will be either
India V Pak or
Aust V England @SkyCricket @FoxCricket
இதில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி தான் எதிர்கொண்ட நியூசிலாந்த், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.