இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரைத் தீர்மாணிக்கும் போட்டி நாளை உத்திரபிரதேசத்தின் கான்பூரில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது நியூசிலாந்து.
பின்னர் அற்புதமாக கம் பேக் கொடுத்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் அபாரமாக வென்று திருப்பிக் கொடுத்தது இந்திய அணி. தொடரைக் தீர்மாணிக்கும் கடைசி போட்டி நாளை கான்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் கான்பூர் வந்தடைந்தனர். மேலும், இந்திய அணியின் பயிற்சி நேரமான மதியம் 12 மணிக்கு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், 9 மணிக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த போட்டி முதலின் உத்திர பிரதேசத்தின் லக்னோ நகரில் நடப்பதாக இருந்தது., பின்னர் கான்பூருக்கு மாற்றப்பட்டது. மேலும் ,மைதானத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, முந்தைய போட்டி நடந்த புனே மைதானம் பிட்ச் டேம்ப்பெரிங் செய்யப்ட்டதாக ஆடுகள பராமரிப்பாளர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக கான்பூர் மைதானத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் வெளி ஆட்கள் மைதானத்திற்க்குள் போட்டிக்கு முன் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆடகள பராமரிப்பாளர் யாருடனும் ஆடுகளத்தைப் பற்றி பேசவும் தடை செய்யப்பட்டுள்ளது.
தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை கான்பூரில் நடக்கிறது. இந்நிலையில், கடைசி போட்டியை எதிர்கொள்வதற்காக பதற்றத்தைவிட நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரித்துள்ளார்.
இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘எந்தவித நெருக்கடியும் இல்லை. அதிக அளவில் மகிழ்ச்சியாக உள்ளோம் என்பதை என்னால் கட்டாயம் கூற இயலும்.
பயிற்சியின்போது எங்கள் அணி வீரர்களிடையே அதிக மகிழ்ச்சி நிலவியது. நேற்றைக்குப் பிறகு நாங்கள் புத்துணர்ச்சி அடைந்துள்ளோம். நாளை போட்டியின் முடிவை பொறுத்து தொடர் அமைய இருக்கிறது.
இந்த தொடரை கைப்பற்ற எங்களுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியா வலுவான அணி. சொந்த மண்ணில் அந்த அணியை தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்புவார்கள்’’ என்றார்.