சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வருடமும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக விளையாடியது. குறைந்தபட்சம் அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் ஒரே அணியாக இருந்த சென்னை அணி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தனது தொடரை முடித்தது.
இது அனைத்து ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது. இதற்கு என்ன காரணம் ஏன் சென்னை அணி சென்ற ஆண்டு மற்ற ஆண்டுகளில் விளையாடியது போல் தங்களால் சரியாக விளையாடவில்லை என்பது குறித்து தீபக் சஹர் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு சிலருக்கு கொரோனா உறுதியானது
சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் எனக்கு, அதேபோல ருத்ராஜ் மற்றும் ஒரு சில முக்கிய நபர்களுக்கு கொரோனா உறுதியானது . எனவே அதிலிருந்து நாங்கள் முழுமையாக மீள சில காலம் தேவைப்பட்டது. எங்களால் எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட முடியாமல் போனது.
அது மட்டுமின்றி சென்ற ஆண்டு நிறைய வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர் அதன் காரணமாகவே எங்களால் சென்ற ஆண்டு மிக சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று தீபக் சஹர் கூறியுள்ளார். அதன் காரணமாகவே எங்களால் அதிக போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா இல்லாமல் போனது எங்களுக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது
சென்ற ஆண்டு சில பிரச்சனைகளால் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட முடியாமல் இந்திய நாட்டிற்கு திரும்பினார். அவரது இடத்தில் சரியாக விளையாட நல்ல வீரர் இல்லாத காரணத்தினால் நாங்கள் மேலும் சில போட்டிகளில் தடுமாறினாலும் என்று தீபக் சஹர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவற்றையெல்லாம் சரி செய்து கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக ஓரணியாக நாங்கள் செயல்பட்டோம். அதன் காரணமாகவே எங்களால் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற முடிந்தது என்று கூறியுள்ளார். நிச்சயமாக சென்றாண்டு நடந்தது போல் இந்த ஆண்டு நடக்காது என்றும், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என்றும் இறுதியாக தீபக் சஹர் கூறி முடித்தார்.
பிசிசிஐ மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.