இதனால் தான் தோனியை திருமணத்திற்கு கோலி அழைக்கவில்லை

தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது, ஆனால் அவர்களின் எண்ணம் எல்லாம் விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம் மீது தான் உள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு ஓய்வு எடுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இத்தாலியில் தன் நீண்ட நாள் காதலி அனுஷ்கா ஷர்மாவை மணந்தார்.

விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம் என்றாவது ஒருநாள் நடக்க போவது தான், இதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால், அவரது திருமணத்திற்கு முக்கியமான நபர்களை மட்டுமே அழைத்தார். அந்த முக்கியமான நபர்கள் பட்டியலில் அவருடைய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரும் இல்லை என்பது தான் ஆச்சரியம்.

விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணத்தை அவருடைய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கியமான நபர்களை மட்டுமே அழைத்திருக்கிறார் என தகவல் வந்தது. அந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங்கும் இருந்தார்கள். ஆனால், மகேந்திர சிங் தோனி இல்லாததால் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

MS Dhoni of India bats during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017
Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இதனால், விராட் கோலிக்கும் மகேந்திர சிங் தோனிக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே தோனியை பற்றி அனைவரும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் தான் யாரென நிரூபிக்க தான் திருமணத்திற்கு செல்லாமல் இந்திய அணிக்காக விளையாடுகிறார் தோனி.

MS Dhoni of India bats during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

அதே போல் முதல் போட்டியின் போது அவர் இன்னும் பார்மில் தான் இருக்கிறார் என்று நிரூபித்தார். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் விக்கெட் சீட்டுக்கட்டு போல் சரிந்து கொண்டே வந்தது. ஆனால் ஒரு முனையில் தாக்கு பிடித்து விளையாடிய தோனி 65 ரன் அடித்தார். அவரது உதவியால் தான் இந்திய அணி 100 ரன்னுக்கு மேல் சென்றது. அவர் இல்லையென்றால் இந்திய அணி 40 ரன்னுக்குள் சுருண்டிருக்கும். முதலில் விளையாடிய இந்திய அணி 112 ரன் அடித்தது, ஆனால் அதை எளிதாக எட்டியது இலங்கை அணி.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.