டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் தொடரை இந்தியா உடனான நிச்சயம் எளிதாக இருக்காது என புலம்பியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ்.
கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பை எனும் புதிய தொடர் முறையை அறிமுகப்படுத்த ஐசிசி முடிவு செய்தது.
2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த புதிய தொடரை துவங்க முடிவு செய்து, வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க இருக்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் இருந்து துவங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி ஆடும் 2 டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் கோப்பை தொடரில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் தென்னாபிரிக்க அணியுடன் இந்தியா டெஸ்ட் தொடரை மேற்கொள்ள இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து இந்திய மண்ணில் துவங்குகிறது. முதல் தொடரே இந்திய மண்ணில் என்பது கடினமானது என்று தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக எங்களின் ஈடுபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. எங்களை மேலும் ஊக்கப்படுத்த சாம்பியன்ஷிப் தொடரை நன்கு பயன்படுவோம். தென்னாப்பிரிக்கா வீரர்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.
முதல் தொடரே இந்திய அணியுடன் என்பது குறித்து பேசிய அவர், “எந்தவொரு அணியும் இந்தியா சென்று விளையாடுவது கடினம் என நினைப்பர். அந்த வகையில் எங்களுக்கு சாம்பியன்ஷிப் தொடர் மிகவும் கடினமாக தொடங்கப்போகிறது. இறுதியாக ஒவ்வொரு அணிகளும் இந்தியா சென்று விளையாட வேண்டும். நாங்கள் சிறப்பாக தொடங்குவோம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.