நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இன்னொரு சதம் அடித்து இன்னொரு சாதனை படைத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஒரு வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த கேப்டன்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் கேப்டன் விராட் கோலி. நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது 113 ரன் அடித்த விராட் கோலி அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை முந்தினார். இந்த வருடத்தில் 26 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 6 சதம் அடித்து 1460 ரன் அடித்துள்ளார். இந்த பட்டியலில் இருந்த மிஸ்பா உல் ஹக், ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரையும் கோலி பின்னுக்கு தள்ளினார்.
இந்தியாவின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து தோனி கேப்டன் பொறுப்பில் வெளியேறிய பிறகு, கோலி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்கு கேப்டன் ஆன பிறகு, கேப்டனுக்கான சாதனை பட்டியலில் பல கேப்டன்களை பின்னுக்கு தள்ளினார். 2007 ஆம் ஆண்டு 24 இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் 1424 ரன் அடித்திருந்தார். இந்த வருடத்தில் விராட் கோலி மேலும் ஒரு தொடரில் விளையாடவுள்ளதால், இன்னும் அதிக ரன்னை அடிக்கலாம்.
1437 – விராட் கோலி (2017)
1424 ரிக்கி பாண்டிங் (2007)
1373 மிஸ்பா உல் ஹக் (2013)
1268 முகமது அசாருதின் (1998)
1244 ஆஞ்சலோ மேத்யூஸ் (2014)
அதிரடியாக விளையாடி வரும் நியூஸிலாந்து:
337 என்னும் கடினமான இலக்கை துரத்தும்போது, தொடக்கத்திலேயே மார்ட்டின் குப்திலின் விக்கெட்டை பறிகொடுத்தது நியூஸிலாந்து. ஆனால், முதல் ஓவரிலேயே 19 ரன் அடித்து விளாசினார் கோலின் முன்றோ. இந்த கடினமான இலக்கை அடைய அனைத்து நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக விளையாடவேண்டும். இந்திய அணி தரப்பில், நியூஸிலாந்து வீரர்களின் விக்கெட்டை சீரான இடைவெளியில் எடுக்கவேண்டும்.