ரிஷப் பண்ட்டை பாராட்டிய விரேந்தர் சேவாக்

குஜராத் லயன்ஸுக்கு எதிரான போட்டியில் 97 ரன் அடித்து 209 ரன் சேஸ் செய்ய காரணமாய் இருந்தார் ரிஷப் பண்ட். இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது உண்மைதான்.

2016-17-இல் நடந்த உள்ளூர் போட்டிகளில் அற்புதமாக விளையாடி வந்தார் ரிஷப் பண்ட். குஜராத் லியன்ஸுக்கு எதிரான போட்டியில் 209 ரன் சேசிங்கில் கேப்டன் கருண் நாயர் ஆரம்பத்திலேயே தன்னுடைய விக்கெட் இழக்க, உள்ளே வந்த ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை நாளா புறமும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

97 ரன்னில் இருக்கும் பொழுது பந்து பேட்டின் முனையில் பட்டு குஜராத் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. இதனால் தன்னுடைய முதல் ஐபில் சதத்தை 3 ரன்னில் தவற விட்டார் ரிஷப் பண்ட். இருந்தாலும் அவருடைய விளையாட்டு அனைவர்க்கும் பிடித்து போனது. இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இங்கே பாருங்கள்:

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.