3ஆவது போட்டியில் ஸ்பின் பவுலிங் : தோனி அசத்தப் போகிறாரா? 1

இந்தியா-ஆஸ்திரேலியா தொடரைத் தீர்மாணிக்கும் 3ஆவது ஒருநாள் போட்டி இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள கான்பூரின் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்காக நேற்று இரு அணி வீரர்களும் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்திய அணியின் ‘தல’ தோனி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

வழக்கமாக மித வேகப்பந்து வீச்சு வீசும் அவர் இந்த வலைப்பயிற்சியில் வித்யாசமாக சுழற்பந்து வீசி பயிற்சி எடுத்து வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைர்அல் ஆகி வருகிறது.

மேலும், இதனால் தோனி இன்றைய போட்டியில் பந்து வீசுவார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் கண்டிபாக சுழற்ப்பந்து வீசி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வைரல் வீடியோவை நேற்று பி.சி.சி.ஐ ன் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. குல்தீப் யாதவ் மற்றும் யுஜவேந்திர அகால் ஆகியோரின் சுழற்பந்து இந்திய அணிக்கு பத்தாது போலிருக்கிறது.

இதனால் தோனியும் அந்த சுழற்பந்து படையில் சேர்ந்திருக்கிறார் என்கிறது ஒரு வட்டாரம். ஏற்க்கனவே சுழற்ப்பந்து என்றாலே வெண்ணீரை காலில் ஊற்றிக்கோண்டது போல் ஆடுகிறார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள், இதில் மேலும் ஒரு சுழற்ப்பந்தா? என்கிறது மற்றொரு வட்டாராம்.

 

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
3-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் முறையே இந்திய அணி 26 ரன், 50 ரன் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது.

இதில் வெற்றி பெறும் பட்சத்தில் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கும் முன்னேற முடியும். முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, மனிஷ் பாண்டே ஆகியோரின் பேட்டிங் சரியில்லை. அவர்களும் பார்முக்கு திரும்பினால் அணி இன்னும் வலுப்பெறும்.

குல்தீப் ஹாட்ரிக் சாதனையும் நிகழ்த்தி இருக்கிறார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ‘ஸ்விங்’ தாக்குதலில் மிரட்டுகிறார்கள். குறிப்பாக புவனேஷ்வர்குமார் ஓவருக்கு சராசரியாக 3.34 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சாதனை விளிம்பில் காத்திருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி மேற்கொண்டு 41 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் முதல் இரு ஆட்டங்களில் ஓய்வு எடுத்த தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அவர் உடல்தகுதி பெற்று விட்டதை போன்றே தோன்றுகிறது. புதுமுக வீரர் ஹில்டன் கார்ட்ரைட் முதல் இரு ஆட்டங்களிலும் தலா ஒரு ரன்னில் வீழ்ந்த நிலையில், பிஞ்ச் அடியெடுத்து வைக்கும் போது ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை பலப்படும்.

அத்துடன் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு யுக்தியை சமாளிக்க கூடுதல் கவனமுடன் ஆடுவார்கள். வெளிநாட்டு மண்ணில் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்த மோசமான பயணத்துக்கு முடிவு கட்டுவதற்கும் தீவிரம் காட்டும்.

இந்தூர் மைதானம் பொதுவாகவே பேட்டிங்குக்கு சொர்க்கமாகும். பிட்ச்சில் இருந்து எல்லைக்கோடு தூரம் குறைவானது என்பதால் எளிதில் ரன்மழை பொழிய முடியும்.

மொத்தத்தில் இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்குமா? அல்லது சரிவில் இருந்து ஆஸ்திரேலியா மீண்டு பதிலடி கொடுக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *