நாக்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் ஒரு முறை பந்துவீச்சாளர்களுக்கு எப்படி பந்து வீசணும் என்று ஆலோசனை கூறினார் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி.
சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கிளென் மேக்ஸ்வெலுக்கு எப்படி பந்துவீசணும் என்று ஐடியா கொடுத்தார் தோனி.
இந்த தொடரின் முதல் போட்டியில், ஸ்டம்புக்கு பின்னாடி இருந்து,“அவர் அடிக்கும் மாதிரி பந்தை வீசு, உள்ளே அல்லது வெளியே கட் ஆகணும்,” என தோனி கூறினார்.
இதே போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் ஆலோசனை கூறினார். தொடக்கவீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்து முதல் விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தார்கள். அதற்கு பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.
அதற்கு பிறகு ஹன்ட்ஸ்கோம்ப் மற்றும் ஹெட் சிறப்பாக விளையாடி வந்தார்கள். அப்போது பகுதி நேர பந்துவீச்சாளராக கேதார் ஜாதவ் இருந்தார். அந்நேரத்தில் தான் ஜாதவுக்கு ஆலோசனை கூறினார் விக்கெட் கீப்பர் தோனி.
“இந்த பக்கத்தில் தான் அவர் அதிகமாக விளையாடுவார். அவர் பின்னாடி சென்றால், இந்த பக்கம் விளையாடுவார்,” என ஜாதவுக்கு ஆலோசனை கூறினார் தோனி.
அந்த வீடியோவை பாருங்கள்: