எல்லோராலும் தோணியைப் போன்ற வரும் எமோசனை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியாதல்லவா. அதனை தான் இன்று ரோகித் சர்மாவும் செய்தார். ஆம், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெறது வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ராகுல், தோனி மற்றும் மனீஷ் பாண்டேவின் அபார ஆட்டத்தால் நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189 றன் குவித்தது. ஒப்பானராக இறங்கிய ராகுல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். மொத்தம் 48 பந்துகளில் 61 ரன் குவித்து இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்தார்.
இதில், வேடிக்கை என்னவென்றால் மேத்யூஸ் வீசிய 7ஆவது ஓவரின் முதல் பந்தில் கே.எல் ராகுல் லெக் பிபோர் அவுட் கொடுக்கப்பட்டார். லெக் ஸ்டம்பை தவறவிட்டு சென்ற அந்த பந்தை சுதாரித்து பார்த்த ராகுல் ரிவ்யூ கேட்டார். அது சக்ஸஸ் ஆகி அவுட் இல்லை என தெரிந்தது.
https://twitter.com/rohitpandeyee/status/943486355723526144
இதனைப் பார்த்த ரோகித் சர்மா மகிழ்ச்சி தாங்காமல் கைதட்டி சிரித்தபடி அந்த முடிவை வரவேற்றார். அதே இடத்தில் தான் தோனியும் இருந்தார், ஆனால் இவற்றை எல்லாம் பார்த்து பழக்கப்பட்டு போன தோனி அமைதியாக ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தார் அந்த பக்கம் நகர்ந்து போனார். என்ன இருந்தாலும் தோணியைப் போல ஒரு வீரர் வருவது கடினம்தானே.