சமீபகாலமாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இடது கை பந்துவீச்சாளர்களிடம் திணறி வருவதால், நியூஸிலாந்து தொடருக்கு முன்பு இந்திய அணி ஒரு முக்கிய விருந்தாளியை அழைத்திருந்தது. முகமது அமீர், ஜேசன் பெஹ்ரண்டர்ப் ஆகியோர் இந்திய அணியின் முக்கிய வீரர்களை நசுக்கி போட்டதால், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சை சமாளிக்க, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை அழைத்திருந்தார்கள்.
புதிதாக வந்த இந்த வீடியோவை பார்த்தால், அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய வீரர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்தார் என்று தெரிகிறது. வேகமாக ஓடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் அதே வேகத்தில் பந்துவீசுகிறார், இதனால் கேப்டன் விராட் கோலி ஆச்சரியப்பட்டார்.
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணுடன் அவர் ஆலோசனை செய்துகொண்டிருந்தார் மற்றும் 130 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதாகவும் தகவல் வந்தது. இதற்கு முன்பு மகளிர் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன்பு இந்திய மகளிர் அணிக்கு பந்துவீசினார், அதுமட்டும் அல்லாமல் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவுக்கு யார்கரால் அவருக்கு காயத்தையும் ஏற்படுத்தினார்.
என்னதான் அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி கொடுத்தாலும், நியூஸிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்திய அணியிடம் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், எம்.ஸ். தோனி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை அவர் எடுத்ததால், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. லதம் மற்றும் டெய்லர் 95 ரன்னால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.