இந்த பையன கவனிச்சுக்கோங்க, சவுத் ஆப்பிரிக்காவை வெளுத்துவாங்க போறான்; கவாஸ்கர் கணிப்பு! 1

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை இந்த இந்திய வீரர்  வெளுத்து வாங்கப்போகிறார் என பேட்டியளித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி 327 ரன்கள் சேர்த்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது துவக்க வீரர்கள் தான். மயங்க் அகர்வால் துரதிஸ்டவசமாக 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் மனம் தளராமல் அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல் சதம் விளாசினார்.

இந்த பையன கவனிச்சுக்கோங்க, சவுத் ஆப்பிரிக்காவை வெளுத்துவாங்க போறான்; கவாஸ்கர் கணிப்பு! 2

தென்ஆப்பிரிக்கா மைதானத்தில் இவர் அடிக்கும் முதல் படம் இதுவாகும். அதேபோல் சர்வதேச டெஸ்டில் 7 சதங்கள் அடித்திருக்கிறார். இங்கிலாந்து மைதானத்தில் சதமடித்தார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இவர் இடம் பெறவில்லை. நியூசிலாந்து டெஸ்டிலும் இதேபோன்ற நிலையே இருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று முதல் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது காரணமாக, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் இந்திய அணி இப்போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்ததற்காக ஆட்டநாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இனி வரும் போட்டிகளில் ராகுல் எப்படி செயல்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த பையன கவனிச்சுக்கோங்க, சவுத் ஆப்பிரிக்காவை வெளுத்துவாங்க போறான்; கவாஸ்கர் கணிப்பு! 3

“கேஎல் ராகுல் மீது எவ்வித சந்தேகமும் இல்லை. அபாரமான திறமை கொண்டவர். டெஸ்ட் போட்டிகளில் 2014 ஆம் ஆண்டு அறிமுகமானாலும் முன்னணி வீரர்கள் பலர் இருந்ததால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் 2, 3 ஆண்டுகள் நல்ல பார்மில் இல்லாததால், எதிர்பார்த்த அளவிற்கு அடிக்கவில்லை. அதனாலும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் அணியில் இணைந்திருக்கிறார். நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது. அதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார்.

நிச்சயம் வரும் போட்டிகளில் அடுத்தடுத்து சதங்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு முதல் போட்டியை போலவே பங்களிப்பை கொடுப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. மேலும் துணை கேப்டன் பதவியும் இவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் கூடுதல் பொறுப்புடன் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு கிடைத்த பிறகும் இவரது ரன் குவிப்பில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. இப்போதும் அது தொடர்கிறது. இது அணியின் எதிர்காலத்திற்கு நல்ல விஷயம்.” என கவாஸ்கர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *