அவங்க நல்லா விளையாடுற வர நாங்க பொறுமையா இருப்போம்; நம்பிக்கையை வெளிப்படுத்திய விக்ரம் ரத்தோர் !! 1

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இரண்டு வீரர்களும் கடந்த சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக இந்த இரண்டு வீரர்களும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அவங்க நல்லா விளையாடுற வர நாங்க பொறுமையா இருப்போம்; நம்பிக்கையை வெளிப்படுத்திய விக்ரம் ரத்தோர் !! 2

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரஹானே அணியை திறம்பட வழிநடத்தி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வெற்றி பெற்றுக் கொடுத்தார். அதே தொடரில் இந்திய அணியின் அனுபவமாய் துடுப்பாட்டக்காரர் புஜாரா உடம்பால் பந்தை தடுத்து இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார்.

ஆனால் இதனை எல்லாம் மறந்துவிட்டு இந்திய அணியின் சில ரசிகர்கள் மற்றும் சில கிரிக்கெட் வல்லுனர்கள் இந்த இரண்டு வீரர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் ரஹானே மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினாலும் புஜாரா இன்னும் மோசமான பார்மில் தான் உள்ளார். இதன் காரணமாக இந்த இரண்டு வீரர்களையும் மீண்டும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அவங்க நல்லா விளையாடுற வர நாங்க பொறுமையா இருப்போம்; நம்பிக்கையை வெளிப்படுத்திய விக்ரம் ரத்தோர் !! 3

இன்னிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார்.

இந்த இருவர் குறித்தும் அவர் பேசுகையில், ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரண்டு வீரர்களும் இக்கட்டான நிலையில் கடுமையான மைதானத்தில் இந்திய அணிக்காக ரன்களை குவித்து உள்ளனர் ஆனால் இவர்களைப் போன்று மற்ற யாரும் செய்ததில்லை, இவர்களால் தற்பொழுது பெரிதாக எதுவும் அடிக்க முடியவில்லை ஆனால் நாங்கள் அவர்கள் அடிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கிறோம், பேட்டிங் பயிற்சியாளரான நாங்கள் எங்களது சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளோம், நாங்கள் அவர்கள் சிறப்பாக விளையாடும் வரை பொறுமை இழக்க மாட்டோம் என்று ரஹானே மற்றும் புஜாரா மீது நம்பிக்கை வைத்து விக்ரம் ரத்தோர் பேசியுள்ளார்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *