நீங்க யார் என்னை நிராகரிப்பதற்கு, கடுப்பான கொல்கத்தா அணி வீரர் !! 1

என்னதான் இந்திய நாட்டில் மிகச்சிறந்த வீரர்கள் இருந்தாலும் அவர்களால் இந்திய அணியில் தேர்வாக முடியவில்லை இதற்கு பல காரணங்கள் கூறினாலும் பெரும்பாலாக இந்திய அணியின் தேர்வாளர்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும்,வீரர்களை தேர்வு செய்வதில் பல அரசியல் உள்நோக்கங்கள் உள்ளதாகவும் வீரர்களிடத்திலும் மக்களிடத்திலும் காலங்காலமாக பதில் கிடைக்காத கேள்வி உள்ளது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த 34 வயது ஆகும் செல்டன் ஜேம்சன் இந்திய அணியின் கிரிக்கெட் தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீங்க யார் என்னை நிராகரிப்பதற்கு, கடுப்பான கொல்கத்தா அணி வீரர் !! 2

புதுச்சேரியை சேர்ந்த பரோடா அணியில் விளையாடும் செல்டன் ஜேம்சன் கடந்த இரண்டு ரஞ்சி டிராபியில் 800க்கும் அதிகமான ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் 2018-2019 நடைபெற்ற போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக மிகச் சிறந்த முறையில் விளையாடினார்.இருந்தபோதும் அந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடிய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் இவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவரை இந்திய அணித் தேர்வாளர்கள் தேர்வு செய்யாமல் மறுத்து வருகின்றனர். இதனால் விரக்தி அடைந்த செல்டன் ஜேம்சன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, எனக்கு 34 வயது ஆகிறது நான் 22-23வயது வீரர்களை விட மிகச் சிறப்பாக செயல்படுகிறார் இருந்த போதும் என்னை இந்திய அணித் தேர்வாளர்கள் நிராகரித்து வருகின்றனர்,எந்த விதியின் அடிப்படையில் என்னை நிராகரிக்கின்றனர் என்று எனக்கு தெரியவில்லை என்னுடைய உடற் தகுதியை வைத்தா அல்லது எனது திறமையை வைத்தா என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.

நீங்க யார் என்னை நிராகரிப்பதற்கு, கடுப்பான கொல்கத்தா அணி வீரர் !! 3

மேலும் அவர் தெரிவித்ததாவது நீங்கள் 800 முதல் 900 ரன்களை எளிதாக அடிக்க முடிந்தால் நீங்கள் மிகவும் தகுதியாக உள்ளீர்கள் என்று தான் அர்த்தம் ஆனால் இவர்கள் எனக்கு 30 இற்கும் அதிகமான வயது ஆகிவிட்டதால் நிராகரிப்பதாக கூறுகிறார்கள், இதை சொல்வதற்கு இவர்கள் யார் என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் இறுதியாக நடந்துமுடிந்த சையது முஷ்டாக் அழி போட்டியில் 5 போட்டிகளில் பங்கேற்று 242 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி னார் நீண்ட இடைவேளைக்கு பிறகு கொல்கத்தா அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் மீதமுள்ள 2021 ஐபிஎல் தொடரில் பங்கு கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *