பந்துவீச்சாளர்கள் இல்லை… எங்கள் தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; வேதனையை வெளிப்படுத்திய டூபிளசிஸ்
எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கும் தகுதி பெற்றது.
17வது ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் – பெங்களூர் இடையேயான எலிமினேட்டர் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் படித்த 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரியான் பிராக் 36 ரன்களும், ஹெட்மயர் 26 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19வது ஓவர் முடிவில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கும் தகுதி பெற்றது.
இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், பேட்டிங்கில் சரியாக செயல்படாததே தோல்விக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “ஆடுகளத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் நாங்கள் எடுத்த 172 ரன்கள் வெற்றி போதுமானது இல்லை என்பதை முன்பே நினைத்தோம். பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. பேட்டிங்கில் நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் அது வெற்றிக்கு போதுமான ரன்களாக இருந்திருக்கும். எங்கள் வீரர்கள் தங்களால் முடிந்தவரை போரடினர், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பனிப்பொழிவு, இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸை தாண்டி இது போன்ற குறைவான இலக்கை கட்டுப்படுத்துவது சாதரண விசயம் கிடையாது. இந்த முறையும் நாங்கள் கோப்பையை வெல்ல தவறியிருந்தாலும், எங்கள் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என அனைவரும் கூறிய போதும் நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றோம். இந்த போட்டியில் நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் எடுக்காததும், பேட்டிங்கில் சொதப்பியதுமே தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டது” என்று தெரிவித்தார்.