கவனமா இருக்க வேண்டியது நாங்க இல்ல இந்தியா தான்; எச்சரிக்கும் இங்கிலாந்து வீரர்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்த தான் ஆவலுடன் காத்திருப்பதாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான மொய்ன் அலி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், அடுத்த 3 இடங்களைப் பிடிப்பதற்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
இந்திய அணி11 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 4-வது இடத்தைப் பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பர்மிங்ஹாமில் நாளை நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் 3 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் மட்டுமல்லாது அடுத்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பு கடினமாகிவிடும். இந்த சூழலில் நாளைய ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விராட் கோலி இதுவரை 4 அரைசதங்கள் அடித்து சூப்பர் ஃபார்மில் இருந்து வருகிறார். அவரை ஆட்டமிழக்கச் செய்ய மற்ற அணி வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். ஆனால்,
விராட் கோலியின் விக்கெட்டை என்னால் எளிதாக வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

நாளைய ஆட்டத்தில், விராட் கோலி இந்திய அணிக்காக ரன் சேர்க்க இங்கே வருகிறார். ஆனால், நான் அவரை ஆட்டமிழக்கச் செய்ய இங்கே இருக்கிறேன் பலபந்துவீச்சாளர்கள் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ய சிரமப்பட்டு இருக்கலாம்.
ஆனால், நான் விராட் கோலியை எளிதாக ஆட்டமிழக்கச் செய்வேன். விராட் கோலி எனக்கு சிறந்த நண்பர் என்பதால், அவரை ஆட்டமிழக்க நான் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.