நான் அப்பவே சொன்னேன் ஆனா யாரும் கேக்கல... இனியாச்சும் 4வது இடத்தில் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த மிஸ்பாஹ் உல் ஹக் !! 1
நான் அப்பவே சொன்னேன் ஆனா யாரும் கேக்கல… இனியாச்சும் 4வது இடத்தில் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த மிஸ்பாஹ் உல் ஹக்

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நான்காவது வீரராக கே.எல் ராகுலை களமிறக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான மிஸ்பாஹ் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் மிரட்டல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது.

நான் அப்பவே சொன்னேன் ஆனா யாரும் கேக்கல... இனியாச்சும் 4வது இடத்தில் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த மிஸ்பாஹ் உல் ஹக் !! 2

இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி தனது அடுத்த போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணி இந்த தொடரில் இதுவரை வெற்றியை மட்டுமே சந்தித்திருந்தாலும், ஒரு சில வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வந்த ஷர்துல் தாகூரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமியை இந்திய அணி ஆடும் லெவனில் சேர்த்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை முகமது ஷமி சரியாக பயன்படுத்தி கொண்டு விக்கெட் வேட்டை நடத்தி வருவதால் பந்துவீச்சில் இருந்த பிரச்சனை ஒருவழியாக சரி செய்யப்பட்டது.

நான் அப்பவே சொன்னேன் ஆனா யாரும் கேக்கல... இனியாச்சும் 4வது இடத்தில் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த மிஸ்பாஹ் உல் ஹக் !! 3

பேட்டிங்கில் விராட் கோலி, கே.எல் ராகுல், ரோஹித் சர்மா என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்து கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து இந்த்ய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வரும் ஸ்ரேயஸ் ஐயரை ஆடும் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர்.

நான் அப்பவே சொன்னேன் ஆனா யாரும் கேக்கல... இனியாச்சும் 4வது இடத்தில் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த மிஸ்பாஹ் உல் ஹக் !! 4

இந்தநிலையில், ஸ்ரேயஸ் ஐயரின் சொதப்பல் பேட்டிங் குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான மிஸ்பாஹ் உல் ஹக், இந்திய அணியின் நான்காவது இடத்தில் கே.எல் ராகுலை களமிறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிஸ்பாஹ் உல் ஹக் பேசுகையில், “ஸ்ரேயஸ் ஐயர் ஷார்ட் பால் குறித்து அதிகம் யோசிப்பதாக நான் கருதுகிறேன். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தனக்கு எப்படியும் ஷார்ட் பால் தான் வீசுவார்கள் என்பதால் ஸ்ரேயஸ் ஐயர் அதை நினைத்து கொண்டே விளையாடுகிறார், எனவே தான் ஷார்ட் இல்லாத பந்துகளிலும் தேவையற்ற ஷாட் அடித்து விக்கெட்டை இழந்துவிடுகிறார். ஸ்ரேயஸ் ஐயர் இதே போன்று விளையாடினால் அவருக்கு இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவார். இந்திய அணியின் நான்காவது இடத்தில் களமிறங்க  மற்ற அனைத்து வீரர்களையும் விட கே.எல் ராகுல் தான் சிறந்த வீரர் என நான் முன்பு இருந்தே பேசி வருகிறேன். கே.எல் ராகுலை நான்காவது இடத்தில் களமிறக்கினால் இந்திய அணியில் நிலவி மிடில் ஆர்டர் பிரச்சனை சரியாகிவிடும்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *